×

கள்ளக்காதல் விவகாரத்தில் 2வது மாடியில் இருந்து தள்ளி வீட்டு உரிமையாளர் கொலை: கொத்தனார் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மைக்கேல் துரை பாண்டியன் (52). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பொன்மாலா (43). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் 3வது தளத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் தங்கி, கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மைக்கேல் துரைபாண்டியனின் மனைவி பொன்மாலாவுக்கும், வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, வெங்கடேசனுக்கும், பொன்மாலாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், பொன்மாலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவர் கூச்சல் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு 2வது மாடிக்கு வந்த மைக்கேல் துரைபாண்டியன், வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த வெங்கடேசன், 2வது மாடியில் இருந்து மைக்கேல் துரை பாண்டியனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், மைக்கேல் துரைபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய வெங்கடேசனை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கள்ளக்காதல் விவகாரத்தில் 2வது மாடியில் இருந்து தள்ளி வீட்டு உரிமையாளர் கொலை: கொத்தனார் கைது appeared first on Dinakaran.

Tags : Mason ,Annanagar ,Michael Durai Pandian ,Koyambedu Seemathamman Nagar ,Ponmala ,Kanchipuram district ,Vandavasi ,Dinakaran ,
× RELATED கொத்தனார் மீது தாக்குதல்